tamilnadu

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 3.50 லட்சம் தென்னங்கன்று ஒதுக்கீடு

புதுக்கோட்டை, ஜூன் 4- புதுக்கோட்டை மாவட் டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட 10,514 தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ரூ.69.20 கோடியும் மற்றும் இதர பயிர் களுக்கு 90 விவசாயிகளுக்கு ரூ.1.6 கோடியும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. தென்னை சாகுபடியில் உளுந்து ஊடுபயிர் சாகுபடிக்கு 4000 எக்டர் பரப்பளவிலும், எள் ஊடுபயிர்  சாகுபடிக்கு 1,500 எக்டர் பரப்பளவிலும் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இத்திட்டத்தில் உளுந்து ஊடுபயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டர் ஒன்றுக்கு ரூ.4,000மதிப்புள்ள 20 கிலோ உளுந்து விதைகளும் மற்றும் இதரஇடுபொருட்களும், இதே போல் எள் ஊடுபயிர் சாகுபடிக்கு விவசாயிக்கு எக்டர்ஒன்றுக்கு ரூ.3,000 மதிப்புள்ள5 கிலோ எள் விதைகளும் இதர இடுபொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டுள் ளது. மேலும் இழந்த தென் னங்கன்றுகளை நடுவதற்கு மாவட்டத்திற்கு 3.50 இலட்சம் தென்னங்கன்றுகள் ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை 25,000 தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட் டுள்ளது. இதுகுறித்த மேலும்விபரங்களுக்கு அருகிலுள்ளவேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.