tamilnadu

img

கார் கவிழ்ந்து மாணவி பலி: 3 பேர் காயம்

தஞ்சாவூர், மே18- திருச்சியிலிருந்து, தஞ்சாவூர் நோக்கி வெள்ளிக்கிழமை காலை சென்ற கார், செங்கிப்பட்டி அருகே மூன்று கண் பாலம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த தஞ்சாவூர் அருகேயுள்ள தனியார் பல்கலைக்கழக மாணவி திருவையாறு அருகே நடுக்காவேரியைச் சேர்ந்த சீனிவாசனின் மகள் ரம்யா(21) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அதே பல்கலைக்கழக மாணவி சென்னையைச் சேர்ந்த நித்யா(21), சூர்யா(21), சௌமியா(21) ஆகியோர் பலத்த காயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து செங்கிப்பட்டி காவல்துறையினர் விசாரித்தனர். 

;