tamilnadu

img

திருச்சியில் சட்டவிரோதமாக நாக்கை பிளவுபடுத்தி டாட்டூ போட்ட 2 பேர் கைது!

திருச்சி,டிசம்பர்.16- சட்டவிரோதமாக நாக்கை பிளவுபடுத்தி டாட்டூ போட்டு அதனை வீடியோவாக வெளியிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சிந்தாமணி பகுதியில் டாட்டூ கடை நடத்தி வந்த ஹரிஹரன் என்பவர் மும்பை சென்று தன்னுடைய நாக்கை பிளவுபடுத்தி டாட்டு போட்டுள்ளார். அதேபோன்று அவரது நண்பர் ஜெயராமுக்கும் நாக்கை பிளவுபடுத்தி டாட்டு போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து மருத்துவ கட்டுப்பாட்டை மீறி அறுவைசிகிச்சை செய்தது உள்ளிட்ட காரணங்களால், இருவர் மீதும் 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து அவரது டாட்டூ கடைக்கு சீல் வைத்துள்ளனர்.