tamilnadu

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு  ஜூன் 11-ல் அரசு மாணவர்  விடுதிகள் திறப்பு

  திருச்சிராப்பள்ளி, ஜூன் 2-  தமிழக அரசின் உத்தரவுபடி, பள்ளி மாணவ, மாணவியருக் கான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11-ஆம், 12-ஆம் வகுப்புகளுக்கு விடுபட்ட பொ துத் தேர்வுகள் வரும் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதிகள் வரும் 11-ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற் படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி (2019-20 ஆம் கல்வியாண்டில்) கல்வி பயின்று வந்த பள்ளி மாணவ, மாணவியர் கள் வரும்11-ஆம் தேதி முதல் இவ் விடுதியில் தங்கி பொதுத்தேர் வினை எழுத தகுந்த முன்னேற் பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிவராசு தெரிவித்துள் ளார்.

;