tamilnadu

‘காதலிக்குமாறு பெண்களை கட்டாயப்படுத்த ஆண்களுக்கு உரிமை இல்லை’

சென்னை,ஏப்.30- சென்னை திருவான்மியூரில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய கவின் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி கவின், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் மீதான விசாரணையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதி கூறுகையில், பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு கருணை காட்டுவது, மன்னிப்பது போன்ற இரக்கம் காட்டுவதை நீதிமன்றங்கள் நிறுத்த வேண்டியஅவசியம் எழுந்துள்ளது. பெண்களை காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தவோ அல்லது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவோ எந்த ஆணுக்கும் உரிமையில்லை. நீதிமன்றங்கள்சமூகத்திற்கு தேவையான உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வலியுத்தியுள்ளார்.

;