tamilnadu

img

‘அதிமுகவினால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை’

திருச்சிராப்பள்ளி, ஏப்.3-மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுகரசர் புதனன்று திருச்சிமேற்கு தொகுதிக்குட்பட்ட மிளகுபாறை, கள்ளர்தெரு, நாயக்கர்தெரு, ஆதிதிராவிடர்தெரு, பொன்னகர், காமராஜ்நகர், கருமண்டபம் பகுதி ஆர்எம்எஸ்காலனி, ராம்ஜிநகர், பிராட்டியூர், செல்வநகர், இளங்காட்டு மாரியம்மன் கோவில், கிராப்பட்டி பிள்ளையார் கோவில், மிஷன் கோவில்தெரு, எடமலைப்பட்டிபுதூர், ராமச்சந்திராநகர், கீழபஞ்சப்பூர், மேலபஞ்சப்பூர், காஜாமலை, சுந்தர்நகர் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் வாக்குசேகரித்தார். வேட்பாளர் திருநாவுக்கரசர் பேசுகையில், அதிமுக உடைந்து சின்னாபின்னாமாகியுள்ளது. அந்த கட்சியை பாஜக தலைவர் அமித்ஷா தான் ஆட்டிபடைத்து வருகிறார். பெட்ரோல், டீசல்,சிலிண்டர் விலை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்து கொண்டே செல்கிறது. விலைவாசியை குறைக்கவும், இந்தியா வளர்ச்சி அடையவும் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமையவேண்டும். அதிமுகவினால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் ஏற்படபோவதில்லை என்றார்.

;