காவலர்கள் 5 பேர் உட்பட 116 பேருக்கு கொரோனா
தேனி, ஆக.30- தேனியில் காவல்துறையை சேர்ந்த 5 பேர், சுகாதாரத்துறை ஆய்வக உதவி யாளர் உட்பட 116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹைவேவிஸ் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் தேனி அருகே வாய்க்கல்பட்டியை சேர்ந்த 49 வயது காவலர், தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் 34 வயது தனிப்பிரிவு காவலர், பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் 36 வயது பெண் காவலர், தேனி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரி யும் 30 வயது தொழில் நுட்ப சார்பு ஆய்வா ளர், போடி நகர் காவல்நிலையத்தில் 30 வயது காவலர், கூடலூர் ஆரம்ப சுகா தார நிலையத்தில் பணிபுரியும் 46 வயது ஆய்வக உதவியாளர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது .இதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 12,523 ஆக உயர்ந்துள் ளது.
வாலிபர் கைது
திருவில்லிபுத்தூர், ஆக.30- விருதுநகர் மாவட்டம் திரு வில்லி புத்தூர் அருகே இலந்தைகுளம் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி முழு ஊரடங்கை பயன்படுத்தி கொண்ட மர்மநபர் மது பானக் கடையில் பூட்டை உடைத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 350 க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றார். தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு வந்த நத்தம்பட்டி காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை தேடி வந்த நிலையில் வத்திரா யிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்த ஈஸ் வரன் என்ற வாலிபரை கைது செய்தனர்.
காரில் மதுபாட்டில் கடத்திய சூப்பர்வைசர் உள்பட 2 பேர் கைது
நிலக்கோட்டை, ஆக.30- திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக வேலை பார்ப்பவர் வேல்மணி. இவர், கும ரம்பட்டி அருகே உள்ள பஞ்சம்பட்டி யை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமா ரோடு சனிக்கிழமை இரவு சுமார் 9 மணி யளவில் தனது டாஸ்மார்க் கடையில் இருந்து 396 மதுபான பாட்டில்களை காரில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்லுக்கு சென்றார். கார், விளாம்பட்டியை கடந்து ஒரு தனியார் பேப்பர் மில் அருகே சென்ற போது அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமை யிலான போலீசார் காரை மடக்கி சோதனை செய்தபோது 396 பாட்டில்கள் எந்தவிதமான ஆவணங்கள் இன்றி கடத்திச் செல்வதை கண்டு பிடித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மரக்கன்று நடும் விழா
திருவில்லிபுத்தூர், ஆக.29- திருவில்லிபுத்தூர் நகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் ஸ்ரீவில்லிபுத்தூர் கிரீன்சிட்டி சார்பில் சனிக்கிழமையன்று நகராட்சிக்கு பாத்தியப்பட்ட நுண்உரம் தயாரிப்பு மைய வளாகத்தில் மரம் நடு விழா நடைபெற்றது. இதில் ரோட்டரி கிளப் கிரீன்சிட்டியின் தலைவர் முனிராஜ் தலைமையில் முன் னாள் தலைவர்கள் செல்வராஜ், இராஜ சேகர் முன்னிலையில் ஸ்ரீவி நகராட்சி ஆணையாளர் பொறுப்பு ரமேஷ் மரக் கன்றுகளை நட்டார்.இதில் ரோட்டரி கிளப் துணைத்தலைவர் ஆனந்தக் குமார்,செயலாளர் முருகன், துணைச் செயலாளர் பாலமுருகன், கருப்பசாமி, இராஜபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.