tamilnadu

img

குடிநீர் கேட்டு அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்...

திண்டுக்கல்:
திண்டுக்கல் ஒன்றியப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடம் குடிநீர் கேட்டு கிராமப் பெண்கள் முற்றுகையிட்டனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அபிராமி நகர், சுப்புராம் பட்டறை ஆகிய பகுதிகளில் ரூ.10.61 கோடி மதிப்பிலான தார்சாலை, கழிவுநீர் ஓடை, உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் உள்ளிட்ட 66 வளர்ச்சித் திட்ட பணிகளை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.

இந்நிலையில் மைக்கேல் ஆண்டவர். புதுத்தெரு பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் எங்கள் பகுதியில் குடிநீர், சாக்கடை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று அமைச்சர் சீனிவாசனை முற்றுகையிட்டனர். இதே போல் மாலப்பட்டி தோன் போஸ்கோ நகரில் அடிக்கல் நாட்டும் போதும் அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டு சாலை,குடிநீர், கழிவுநீரோடை வசதிகள் செய்துதர வேண்டும் என்று கோரினர். காமாட்சிநகர் பகுதிக்கு சென்ற போது குழாய்களில் குடிநீர் வரவில்லை என்றும், ஊராட்சிக்கு வரி கட்டுகிறோம் என்று மக்கள்  முற்றுகையிட்டு கூறினர். இதனால் அமைச்சர் அப்செட் ஆனாலும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். (ந.நி)