வேடசந்தூர், ஜூலை 9- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி கடந்த 27-ஆம் தேதி ஊரில் உள்ள பெருமாள் என்பவரின் கிணற்றில் பிணமாக கிடந்தார். எரியோடு காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி வேட சந்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் பள்ளி மாணவி பாலி யல் பலத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றவாளி களை கைது செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் வியாழனன்று (9.7.2020) எரியோடு காவல்துறையினர் பெருமாள் என்பவரின் கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி பார்த்தபோது பிணமாக மிதந்த சிறுமி யின் செல்போன் மற்றும் கொலுசு ஆகிய வற்றை கைப்பற்றினர். சம்பவத்தன்று (26.6.2020) மாலை பள்ளி மாணவி வீட்டைவிட்டு காணாமல் சென்றதில் இருந்து அவரது செல்போ னுக்கு அழைத்து பேசியவர்கள் யார் யார் என்பது குறித்து முறையான விசா ரணை நடத்தினால் உண்மை தெரிய வரும்.