tamilnadu

img

திண்டுக்கல்: கிடப்பில் பாலப் பணிகள் போராட்டத்திற்கு தயாராகிறது சிபிஎம்...

திண்டுக்கல்:
திண்டுக்கல்-கரூர் சாலையில் ரயில்வே கேட்டில் நிலத்தடிபாலம் கட்டும் பணிகள் இரண் டாண்டுகளாக கிடப்பில் போடப் பட்டுள்ளது. 

திண்டுக்கல்- திருச்சிராப் பள்ளி சாலையில் குஜிலியம் பாறை வழியாக செல்லும் கரூர் சாலை உள்ளது. நந்தவனப்பட்டி, தொட்டனம்பட்டி, எரியோடு,கோவிலூர், குஜிலியம்பாறை, பாளையம், டி.கூடலூர், வெள்ளியணை, தான்தோன்றிமலை ஆகிய ஊர்கள் வழியாக கரூர்செல்லும் மிக முக்கிய சாலைஆகும். விவசாயத்தை முதன்மைதொழிலாகக் கொண்ட இந்த கிராமங்களில் இருந்து திண்டுக்கல், கரூருக்கு ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள் வேலைக்காக சென்று வருகின்றனர். இந்தகிராம மக்கள் மகப்பேறு உள் ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்குத்தான் வரவேண்டும். சுற்றுவட்டார கிராமங்ளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிமாணவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பள்ளி-கல்லூரிகளில் படிக்கிறார்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சாலையில் பாலம்கட்டும் பணி கடந்த இரண்டாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள் ளது. ரயில்வேயின் மெத்தனமே இதற்குக் காரணம். இந்தப் பாலம் கடந்த ஓராண்டாக குளம்போல் காட்சியளிக்கிறது. 

இந்தப் பாலத்தை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி,நகரச்செயலாளர் பி.ஆஸாத், அரபுமுகமது, கே.எஸ்.கணேசன் பார்வையிட்டனர். பாலம் கட்டும்பணியை உடனடியாக தொடங்கவேண்டும். தாமதித்தால் மறியல் உள்ளிட்ட தொடர் போராம் டங்களை நடத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.