3 மாதமாக குடிநீர் இல்லை பேரூராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை
வேடசந்தூர், செப்.11- வேடசந்தூரில் பாரதிநகரில் 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகத்தை செவ்வாயன்று முற்றுகையிட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பாரதிநகரில் 100-க்கும் மேற்ப்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதிக்கு முத்தாலம்மன்கோவில் அருகேயும், விநாயகர் கோவில் தெருவிலும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு 4 சின்டெக்ஸ் தொட்டிகளில் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்தததால் கூடுதலாக குழாய் ஆழ்துளை கிணற்றில் பொறுத்தி சீரான குடிநீர் வழங்கவேண்டும் அல்லது காவேரி குடிநீர் ஏற்றி விநியோகம் செய்ய வேண்டும் என்று பாரதிநகர் பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த மூன்று மாதங்களாக கோவிலூர் சாலையில் வால்வு அருகே செல்லும் காவேரி கூட்டு குடிநீரை குறைந்த அளவே பிடித்த்தும், தனியார் குடிநீர் விற்பனை செய்பவர்களிடம் விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். செப்டம்பர் 10 அன்று பாரதிநகர் பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக முற்றிலும் குடிநீர் சேவை நிறுத்தப்பட்டது குறித்து மனுவுடன் வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றபோது அந்த மனுவை அலுவலர் யாரும் பெற்றுக்கொண்டு ஆறுதல் வார்த்தை கூட சொல்ல முன்வரவில்லை. இதனால் கோபடைந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் யாரும் மனுவை பெற முன்வராததால் ஏமாற்றத்தோடு அடுத்த கட்ட போராட்டம் நடந்த உள்ளதாக கூறிவிட்டு சென்றனர்.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்திறன்போட்டிகள்
சென்னை, செப்.11 தமிழகத்தின் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவாக, டாக்டர் எம்.ஜி.ஆர்- ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அக்டோபர் 10 அன்று பள்ளி-கல்லூரி மாணவ-மாணவியருக்கான பல்திறன் போட்டிகளை நடத்த உள்ளது. இதில் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மௌன நடிப்புப் போட்டி, ரங்கோலிப் போட்டி, கவிதைப் போட்டி ஆகிய ஆறு போட்டிகள் இடம் பெறும். இடைநிலை (6-8 வகுப்பு), மேல்நிலை (9-12 வகுப்பு) மற்றும் கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படும் (மௌன நடிப்பு, ரங்கோலி, கவிதைப் போட்டிகளில் மட்டும் இடைநிலைப் பிரிவு கிடையாது). போட்டிகள் அனைத்தும் தமிழிலேயே நடைபெறும். இப்போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை சென்னை, இராஜா அண்ணா மலைபுரத்திலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.- ஜானகி மகளிர் கல்லூரியில் (தொ.பே.: 2493 7382 / 92) பெற்றுக் கொள்ள லாம்; அல்லது றறற.அபசதயயேமi.யஉ.in என்ற இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி அக்டோபர் 3 டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியின் தாளாளர் முனைவர் லதா ராஜேந்திரன் தெரிவித்தார்.
இந்தியன் வங்கி வீட்டு வசதி கடனுக்கான வட்டி விகிதம் 8.20
சென்னை, செப்.10 இந்தியன் வங்கியின் வீட்டு வசதி கடன் ஆண்டுக்கு 8.20 என்ற என்ற வட்டி விகிதத்திலே தொடரும் என்று அவ்வங்கி அறிவித்துள்ளது. வாகனக் கடன்களை (நான்கு சக்கர வாகனங்கள்) ஆண்டிற்கு 8.85விழுக்காடு என்ற வட்டி விகிதத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதுவும் சந்தையில் விளங்கும் மிகக் குறைந்த வட்டி விகிதமாகும். வீட்டுவசதிக் கடன்: அதிகப்படியான திரும்பச் செலுத்துதலுக்கான கால வரையறை – 30 வருடங்கள், அதிகபட்ச உச்ச வரம்பு இல்லை 31.01.2020 வரையில் விண்ணப்ப மதிப்பீட்டிற்கான கட்டணம் கிடையாது, வேறு வங்கி,பொருளாதார நிறுவனங்கள் அளித்த கடன்கள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. மற்ற அடிப்படை வட்டி, எம்சிஎல்ஆர் முறையிலிருந்து ஆர்பிஎல்ஆர் முறைக்கு மாற இயலாது. புதிய 4 சக்கர வாகனம் வாங்குவதற்கு மட்டுமே அதிகபட்சமாக ரூபாய் `2 கோடி வரை கடன் பெறலாம் அதிகப்படியான திரும்பச் செலுத்துதலுக்கான கால வரையறை 84 மாதங்கள் ஆகும். இதனை வங்கியின் பொதுமேலாளர் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.