tamilnadu

பழனியில் மனநல காப்பகம் அமைக்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கம் போராட்ட அறிவிப்பு....

திண்டுக்கல்:
பழனியில் மனநல காப்பகம் அமைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்க மாவட்ட நிர்வாகிகள் பகத்சிங், செல்வநாயகம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. பழனி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பெற்றோரகள் மற்றும்உறவினர்கள் விட்டுச் செல்கின்றனர்.

இதனால் பழனியில் மாற்றுத்திறனாளிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பல்வேறு போராட்டங்களின் விளைவாக பழனியில் மனநல காப்பகம் அமைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்நிலையில் ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி ரெட்டியபட்டியில் செயல்பட்டு வந்த மனநலகாப்பகம் வடமதுரை அருகேயுள்ள அய்யலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திண் டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு காப்பகங்களிலும் பல்வேறு முறைகேடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அரசு விதித்த வழிமுறைகளின்படி பெரும்பாலான காப்பகங்கள் செயல்படுவதில்லை. 50 மாற் றுத்திறனாளிகள் இருக்க வேண்டிய இடத்தில் இருபது பேர் அல்லது முப்பது பேர் என குறைவான எண்ணிக்கையில் பராமரித்து கொண்டு ஐம்பது பேருக்கான நிதியை பெற்று பல மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காப்பகாப்பகங்களிலும் ஆய்வுகள் மேற்கொண்டு முறைகேடாக செயல்படும் காப்பகங்கள் மீதுமாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறப்பு அனுமதி பெற்றுபழனியில் கொண்டுவர திட்டமிடப்பட்டமனநல காப்பகத்தை விரைந்து அமைக்க வேண்டும். 

 ஒரு மாத காலத்திற்குள் பழனியில் மீண்டும் கொண்டுவராவிட்டால் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை திரட்டி காலவரையற்ற காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிப்பதாக அறிக்கையில் கூறியுள்ளனர்.