tamilnadu

img

சவேரியார்பாளையத்தில் ஒரு அன்னவாசல்

திண்டுக்கல், மே 24- கொரோனா ஊரடங்கையொடடி பாதிக்கப்பட்ட திண்டுக்கல்லில் ஆதர வற்றவர்களுக்கு உதரவிக்கரம் நீட்டி யுள்ளது சவேரியார்பாளையம் அன்ன வாசல்.  மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற வர்கள், விதவைகள் என பசியால் வாடு வோருக்கு உண வழங்க தொடங்கப் பட்டு 60 நாட்களைக் கடந்து செயல்படுகி றது சவேரியார்பாளையம் அன்ன வாசல். ஒருங்கிணைப்பாளர் சகாய ராஜ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நகர்க்குழு  உறுப்பினர்கள், சி.பி.ஜெயசீலன், தவக்குமார், கிழக்குப் பகுதிச் செயலா ளர் மத்தியாஸ், வடக்குப் பகுதி செய லாளர் சுவான், மையப்பகுதி செயலா ளர் ஏஞ்சல், கிளை உறுப்பினர் வடிவேல்,  அஜீத். அமர்நாத், ஆகியோரின் பங்க ளிப்போடு செயல்படுகிறது.  திண்டுக்கல் நகர்ப்பகுதியில் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர்க்குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியக்குழு சார்பாக ஆதரவற்றவர்களுக்கு உணவு  வழங்கப்பட்டது. சவேரியார்பாளையம் பகுதியில் வசிப்பவர்கள் தோல் பதனிடும் தொழி லாளர்களின் குடும்பங்கள். வேலை செய்ய முடியாத வயதான மற்றும் ஆதர வற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி யுள்ளது சவேரியார்பாளையம் அன்ன வாசல் குழு. 

அறுந்த செருப்பு வருமென்று .... காத்திருந்த வேளையில்
ஊரடங்கு காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்ததன் காரண மாக செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்  வேலை இழந்து உள்ளனர்.  இது குறித்து செருப்புத் தைக்கும்  தொழிலாளி பழனிச்சாமி கூறியதா வது:- மக்கள் ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களை நம்பி சாலைகளில் தொழில் நடத்தும் நாங்கள் வேலையின்றி உள்ளோம். காலையி லிருந்து மாலை வரை கடும் வெயிலில்  யாராவது ஒருவர் தனது செருப்பை கொண்டு வந்து சரி செய்து தாருங்கள் என வரமாட்டாரா? என்று காத்திருக்கி றோம். ஊடங்கு இல்லாத நாட்களிலே கூட குறைவான வேலை தான் கிடைக் கும். இப்போது முற்றிலுமாக வேலை இல்லை. எங்களுக்கு இதைவிட்டால் வேறு வேலை தெரியாது என்றார். மற்றொரு செருப்பு தைக்கும் தொழி லாளி முனியாண்டி கூறும் போது, கொரோ னா ஊரடங்கு காலத்தில் அரசு எங்க ளுக்கு உதவுவதாகக் கூறுகிறது. நான் நலவாரியத்தில் 15 ஆண்டுகளாக உறுப்பி னராக உள்ளேன். ஆனால் எனக்கு  அரசு உதவி எதுவும் இதுவரை கிடைக்க வில்லை. நலவாரியத்தில் முறை யிட்டேன். அரசு இதுவரை செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்கவில்லை என்கி றார்கள். டீ குடிக்கக்கூட பணமின்றி தவிக்கி றோம். வயதான காலத்தில் எங்களது சொந்த உழைப்பை நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறோம். எங்களை மனிதர்களாகக் கூட மதிக்க மறந்துவிட்டது வேதனையளிக்கிறது. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வழங்கியது போல் எங்களுக்கும் இர ண்டாயிரம் ரூபாய் வழங்கவேண்டு மென்றார்.

 -இலமு,திண்டுக்கல்