பென்னாகரம், அக்.3- பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட நாகமரத்துப்பள்ளம் கிராமமக்கள் 60 ஆண்டுகளாக தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி போராடி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட கலப்பும்பாடி ஊராட்சி பகுதியில் உள்ள நாகமரத்துப் பள்ளம் என்ற கிராமத்தில் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் 60 ஆண்டு களுக்கும் மேலாக வசித்து வருகின் றனர். இப்பகுதி மக்கள் அனைவரும் கூலி வேலை மற்றும் விவசாயத்தை நம்பி தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 60 ஆண்டுகளாக தங்கள் பகுதிக்கு தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கிராமத்தில் இருந்து 50க்கும் மேற் பட்ட குழந்தைகள் பள்ளி மற்றும் கல் லூரிக்கு சென்று வருகின்றனர். இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல வேண்டு மெனில் பேருந்திற்காக சுமார் மூன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதில் குறித்த நேரத்தில் செல்ல வில்லை என்றால் பேருந்து சென்று விடு கிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படு கிறது என அப்பகுதி மக்கள் வேதனை யோடு தெரிவிக்கின்றனர். மேலும் வேலைக்கு செல்வோருக்கும் இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. எனவே தார்ச்சாலை அமைத்து பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப் பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவ டிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே உடனடியாக தார்ச்சாலை அமைத்து பேருந்து இயக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.