tamilnadu

img

அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்திடுக - அமைச்சரிடம் எஸ்எப்ஐ மனு

தருமபுரி, நவ.15- அரியர் மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக உயர் கல்வி துறை மற்றும் வேளாண் மைத் துறை அமைச்சர் கே பி. அன்பழகனிடம், இந்திய மாண வர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட செயலாளர் ந.தமிழ் அமு தன் மனு அளித்தார். இம்மனுவில் மேலும் கூறியி ருப்பதாவது, கொரோனோ காலத் தில் நோய் பரவாமல் இருக்க மாண வர் நலன் கருதி அனைத்து பல்க லைக்கழகங்களின் அரியர் தேர்வு களும் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் நடைமுறை என்ற வகை யில் தமிழக அரசு அறிவித்தது. இதில், அரியர் மாணவர்களுக்கு  குறைந்தபட்ச மதிப்பெண்  வழங் கப்படும் என்று தமிழக அரசு  அறிவித்தது. ஆனால், குறைந்த பட்ச மதிப்பெண் மற்றும் மதிப் பெண் சான்றிதழ் இன்று வரை  கிடைக்க பெறாததால்  மேற்படிப் புகளில் சேர முடியாமல் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கல் லூரி மாணவர்களும் தவித்து வரு கின்றனர் . குறிப்பாக, ஒரு சில கல்லூ ரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்க ளையும், நீங்கள் உங்களுடைய சான்றிதழ்களை திரும்பப் பெற் றுக் கொள்ளுங்கள்.
சட்டத்திற்கு புறம்பாக நாங்கள் எப்படி உங் களை கல்லூரியில் சேர்க்க முடியும், மதிப்பெண் கிடைத்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகங்கள் கூறி வருகின்றன. இதனால் உயர்கல்வி சேர முடியாத நிலை யில் தங்களது எதிர்காலம் என்னா குமோ என மேற்கண்ட மாணவர் கள் தவித்து வருகின்றனர் . எனவே, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராகிய தாங்கள் மேற்கண்ட பிரச்சனையில் உடன டியாக தலையிட்டு அரியர் மாண வர்களுக்கான மதிப்பெண் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை கிடைத்திட உதவுமாறும், மேற்படி மாணவர்கள் கல்லூரிகளில் மேற்படிப்பிற்கு சேர்வதற்கு உத விடும் வகையில் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்றும் இந்திய மாண வர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.