tamilnadu

img

 பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து கருத்தரங்கம்

 தருமபுரி, ஜூலை 13- குழந்தை மற்றும் பெண்களுக்கு நேரிடும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும், போக்ஸோ சட்டம்  குறித்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி கலையரங் கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் தமிழ்நாட்டில் கடந்த 2 வருடங் களில் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் 2003 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 1275 வழக்குகள் நிலுவை யில் உள்ளன. மேலும், கடந்த 2 ஆண்டுகளில் 4 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பாலியல் வன்கொடு மைகளுக்கு எதிராக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு நேரிடும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. மேலும் மருத்துவர்கள் பார்வையில் 18 வயதிற்கு கீழ் உள்ள அனைவரும் சிறுமிகள் தான் இந்த சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படும்போது மருத்துவர் களின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. மருத்துவர்கள் உரிய முறையில் ஆய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கருத்தரங்கில் வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி இயக்குனர் மருத்து வர் எட்வின்ஜோ, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ராஜன், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜிவானந் தம், கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசராஜ், உள்ளிருப்பு மருத் துவ அலுவலர் மருத்துவர் இளங்கோ, சட்டம் சார்ந்த மருத் துவத்துறை உதவி பேராசிரியர் மருத்துவர் எம்.மதன்ராஜ், ஆகியோர் கருத்தரங்கில் பேசினர். மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.