tamilnadu

img

பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் முற்றுகை போராட்டம்

தருமபுரி, அக். 27- பொய்வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி ஆதித்தமி ழர் பேரவையினர் தருமபுரி மாவட்டஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டனர். தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் அருந்ததியர், குறவர், போயர் இன மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பட்டா வுக்கான நிலத்தை  உரிய பயனாளிகளிடம் வழங்க வேண் டும். அடுக்குமாடி குடியிருப்பை அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டி வீடற்ற மக்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் மக்கள் மீது பொய் வழக்கு போடுவதை கைவிட வேண்டும்.

ஏற்க னவே போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் பி.முருகன் தலைமை வகித்தார். இதில், மாநில துணை பொதுச் செயலாளர்கள் இரா.செல்வ வில்லாளன், அர.விடுதலை செல்வன், வெ.வீரசிவா, மாவட் டத் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.