தருமபுரி, நவ.14- தருமபுரி அருகே உள்ள அழகாபுரி கிராம சாலை குண்டும், குழியுமாக உள்ளதை செப்பனிடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி ஒன்றியம், இலக்கியம் பட்டி அரசு கால்நடை மருத்துவமனை அருகே அழகாபுரி கிராமம் அமைந் துள்ளது. இக்கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். சேலம் செல்லும் முக்கிய சாலையிலிருந்து அழகாபுரிக்கு செல்லும் சாலை குண்டும், குழியு மாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி சேதம டைந்த பகுதியில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இத னால் அப்பகுதியில் டெங்கு உள் ளிட்ட வைரஸ் காய்ச்சல் ஏற்படு வதற்கு அதிக வாய்ப்புள்ள என அப் பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இந்த சாலை பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இவ்வழியே இரு சக்கர வாகனங்களில் வருவோர் மற்றும் நடந்து செல்வோர் கடும் சிரமத் திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான இந்த சாலையை செப்பனிட வேண்டும். தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள் பரவா வண்ணம் தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதிக்கு தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.