tamilnadu

img

உரிமைகளை பறிக்கும் மசோதாக்களை திரும்பப்பெறுக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக.8- உரிமைகளை பறிக்கும் மசோ தாக்களை மத்திய அரசு திரும்ப  பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று தருமபுரி தொலைபேசி நிலையம்  முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இரண்டாவது முறையாக மோடி  தலைமையிலான பாஜக அரசு  பதவியேற்ற 35 நாளில் 32 மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் 370 ஆவது பிரிவை நீக்கு வதற்கான தீர்மானம், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா- 2019, சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த (யுஏபிஏ)  மசோதா, முத்தலாக் தடை மசோதா,  திருநங்கைகள் உரிமைகள் பாது காப்பு மசோதா-2019, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகனச் சட்டத் திருத்த  மசோதா, அணை பாதுகாப்பு மசோதா, ஊதியங்கள் சட்ட  மசோதா ஆகியவை குறிப்பிடத் தக்கவை.   மேலும் 17ஆவது நாடாளு மன்றம் அமைக்கப்பட்டபின் இது வரை நாடாளுமன்ற உறுப்பினர் களைக் கொண்ட நிலைக்குழுவோ,  தேர்வுக்குழுவோ அமைக்கப்பட வில்லை.  மோடி அரசின் ஜனநாயக  விரோத போக்கை கண்டித்தும்,  மக்களை பாதிக்கும் சட்ட மசோ தாக்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நல்லம்பள்ளி ஒன்றியச்செயலாளர் கே.குப்புசாமி தலைமை வகித் தனர். மாவட்டச் செயலாளர் ஏ. குமார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.இளம்பரிதி, சி.நாக ராசன், கே.என்.மல்லையன், டி.எஸ்.ராமச்சந்திரன், எஸ்.கிரைஸாமேரி, தருமபுரி நகர செய லாளர் ஆர்.ஜோதிபாசு, பாலக் கோடு வட்டச்செயலாளர் ஜி. நக்கீரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.