tamilnadu

img

தனியார்துறையில் 5 சத இடஒதுக்கீடு வழங்கிடுக - மாற்றுத்திறனாளிகள் முழக்கம்

தருமபுரி, நவ.18- தனியார் துறையில் மாற்றுத்தி றனாளிகளுக்கு 5 சதவீத  இடஒதுக்கீடு வழங்ககோரி அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டம் மற்றும் மனுகொடுக்கும் இயக்கத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்கொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். ஊனமுற்றோர் உரிமைச்சட்டம் 2016ன் படி தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிபணி யிடங்களை 3 மாதத்திற்குள் அரசு நிரப்பிட வேண்டும் என கடந்த 2013 அக்டோபர் 3 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் தீப்பளித்தது. ஆனால், இதுவரை  தமிழக அரசு காலிபணியி டங்களை நிரப்பவில்லை. எனவே  பின்னடைவு காலிபணியி டங்களை நிரப்பவேண்டும் என  வலியுறுத்தி தமிழ்நாடு அனைத் துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தி னர் புதனன்று தருமபுரி பிஎஸ்என் எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் கே.சுசிலா  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில பொரு ளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதேபோல், பாப்பிரெட்பட்டி வட்டம் மெணசியில் நடைபெறற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட நிர்வா கிகள் சேகர், வஞ்சி நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

பொள்ளாச்சி

இதே கோரிக்கைகளை வலியு றுத்தி கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்த சி.மலை யாண்டிபட்டினம், ஊஞ்சவே லாம்பட்டி, சீலக்காம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி, பூசாரி பட்டி, ஜமீன்ஊத்துக்குளி, திப்பம் பட்டி,கூளநாயக்கன்பட்டி, கோமங்கலம்புதூர், புரவிபாளை யம் உள்ளிட்ட  பல்வேறு இடங்க ளில் மாற்றுதிறனாளிகள் சங்கத்தி னர் கிராம நிர்வாக அலுவலர்க ளிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.