tamilnadu

img

நெல்லையில் வாலிபர் சங்க தலைவர் படுகொலை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூன் 17- நெல்லையில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத் தலைவரை வெட்டிப் படுகொலை செய்த குற்றவாளிகளை குண்டர் சட் டத்தில் கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருமபுரி, சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளராக செய லாற்றி வந்த அசோக் ஜூன் 12 ஆம் தேதி  புதனன்று இரவு சாதிய ஆதிக்க சக்தி யினரார் கொடூரமாக வெட்டிப் படு கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தப் படுகொலைக்குக் காரணமான குற்ற வாளிகளை உரிய சட்டப் பிரிவில் கைது செய்யாமல் காவல்துறையினர் அலட்சி யம் காட்டி வருகின்றனர்.இந்நிலை யில் அசோக் படுகொலைக்குக் காரண மான குற்றவாளிகளை உடனடியாக குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். சாதிய ஆதிக்க சக்தியினரின் வெறிச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ கம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம், தமிழ்நாடு தீண்டாடை ஒழிப்பு முன் னணி சார்பில் கண்டன இயக்கங்கள் நடை பெற்று வருகின்றன. இதன்ஒருபகுதியாக, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தருமபுரி மாவட்டம், அரூர் ரவுன்டாணா அருகில் வட்ட செயலாளர் பி.வி.மாது தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி.மாதை யன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், வட்ட செயலாளர்கள் அரூர் ஆர்.மல்லிகா,  பாப்பிரெட்டிப்பட்டி சி.வஞ்சி, மாவட்ட குழு உறுப்பினர் டி.சேகர், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்ட துணை தலைவர் சி.வேலாயுதம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க வட்ட செயலாளர் தனலட்சுமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் பி.சங்கு, எஸ்.கே.கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்டம், சங்ககிரியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.கே.சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கே. வெங்கடாச்சலம், மாவட்டக் குழு உறுப் பினர் என்.ஜெயலட்சுமி மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் செந்தில், ஆறுமுகம், சீனிவாசன் உள்ளிட்ட வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

;