tamilnadu

img

ஒகேனக்கல் குடிநீர் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

தருமபுரி, ஜூன் 15- குடிநீர் வழங்கக்கோரி மொழகனூர்கொட்டாய் பகுதி மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழியிடம் மனு கொடுத்துள்ளனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது, தருமபுரி மாவட் டம், வெள்ளாளப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது மொழு கனூர்கொட்டாய் கிராமம். இக்கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்ப குதி மக்களுக்கு ஒரு ஆழ்த்துளைக் குழாய் மூலம் தண்ணீர் கிடைத்து வந்தது. இந்நிலையில் தற் போது ஏற்பட்ட வறட்சியினால் அதில் தண்ணீர் வரு வதில்லை. ஊராட்சி நிர்வாகமும் இப்பகுதிக்கு குடி நீர் கிடைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.  மேலும்,ஒகேனக்கல் குடிநீர் இணைப்பும் இல்லா ததால் தண்ணீருக்காக 2 கிலோ மீட்டர் தொலைவு நடந்துசென்றும் சைக்களிலும் எடுத்து வரவேண்டி யுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே ஒகேனக்கல் குடிநீர் இணைப்பும், ஊராட்சியில் போதுமான அடிப்படை வசதிகளை யும் செய்துகொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.

;