tamilnadu

ஒகேனக்கல் அருகே காட்டு யானை மிதித்து மூதாட்டி பலி

பென்னாகரம், ஏப்.22-ஒகேனக்கல் வனப்பகுதியில் காட்டு யானை மிதித்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே மடம் சோதனைச்சாவடி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மனைவி முனியம்மாள் (70), இவர்ஒகேனக்கல் வனப்பகுதியில் மூலிகை கிழங்கை சேகரித்து விற்பனை செய்துவந்தார். இந்நிலையில் ஞாயிறன்று காலை ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட முண்டச்சிப்பள்ளம் பகுதியில் முனியம்மாள், தனது பேரன் திருப்பதியுடன் மூலிகை கிழங்கு எடுத்து கொண்டிருந்தார்.அப்போது வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை வந்தது. இதை கண்டு திருப்பதி மற்றும் மூதாட்டி முனியம்மாள் ஆகியோர் தப்பியோட முயன்றனர். ஆனால் மூதாட்டியால் ஓட முடியவில்லை. இந்நிலையில் யானை மூதாட்டியை தூக்கி வீசி காலால் மிதித்ததில் முனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ஒகேனக்கல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். யானை மிதித்து மூதாட்டிஇறந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் காவல்துறையினருக்கு வனத்துறையினர்தகவல் தெரிவித்தனர். பின்னார் காவல்துறையினர் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக கவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதியில் யானை மிதித்து மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;