tamilnadu

img

நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன்

தருமபுரி, ஏப்.7-

பாலக்கோடு பகுதியில் நீர்ப்பாசனத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவேன் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகின்றார். இவர் ஞாயிறன்று பாலக்கோடு பேரூராட்சி, நம்மாண்ட அள்ளி, பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, பாலக்கோடு பகுதியில் நீண்ட நாள்களாக நிலுவையிலுள்ள கூட்டாறு மற்றும் தொல்லகாது புதிய அணை கட்டும் திட்டம், எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். தக்காளி, காய்கறிகள், மலர்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றை பதப்படுத்த குளிர்பதனக்கிடங்கு ஆகியவற்றை அமைப்பேன் என வாக்குறுதியளித்தார்.இப்பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;