தருமபுரி, செப்.11- தருமபுரி-மொரப்பூர் ரயில் திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற வலி யுறுத்தி தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல்ஜெயினை சந்தித்து புதனன்று மனு அளித்தார். இந்த மனுவில் கூறியி ருப்பதாவது, மொரப்பூர் ரயில்நிலையத்தில் சென்னை-திருவனந்தபுரம் வரை செல்லும் அதிவிரைவு ரயில் நின்று செல்ல வேண்டும். பொம்மிடி ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும். மேட்டூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட கோவிலூர் பகுதியில் உள்ள தரை மட்ட பகுதியில் மழைநீர் தேங்காத வாறு சீரமைக்கவும் மற்றும் புதுசாம்பள்ளி பகுதியில் புதிய தரை மட்டபாலம் அமைத் துத்தர வேண்டும். மின்நகர் ராமன் நகர் பகுதிக்கு நடைபாதை அமைத்து கொடுக்க வேண்டும். தருமபுரி ரயில்நிலையத்தில் நடை மேடை 1ல் பயணிகள் ரயிலை நிறுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேட்டூரிலிருந்து சென்னைக்கு ரயில் சேவை தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஜோலார் பேட்டை-அரக்கோணம், ஜோலார் பேட்டை-சென்னை மற்றும் ஏலகிரி ரயிலை சேலம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் பொம் மிடியில் இருந்து மங்களூருக்கு செல்லும் வெஸ்ட்கோஸ் ரயிலில் காய்கறி எடுத்துச் செல்ல பார்சல் புக்கிங் சர்வீஸ் தொடங்க வேண்டும். மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மூத்த குடி மக்கள் சலுகை கட்டண பயணச்சீட்டில் “உங்கள் கட்டணத்தில் 43 சதம் நாட்டின் பொதுமக்களால்” என்ற வாசகத்தை உடனடியாக நீக்கி தனிநபர் கவுரவத்தை காக்கவேண்டும். மேலும் தென்மேற்கு ரயில்வே மண்டல பகுதியை சேர்ந்த தரும புரி ரயில்நிலைய மேம்பாட்டு பணிகள் மற்றும் தருமபுரி ரயில்வே மேம்பாட்டு பணி கள் பாலக்கோடு மாரண்ட அள்ளி ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். தரும புரி-பெங்களூரு இடையே புதிய ரயில்வே சேவையை தொடங்க வேண்டுமென உள் ளிட்ட கோரிக்கைகள் மனுவில் தெரி விக்கப்பட்டிருந்து.