தருமபுரி, செப். 6- ஊத்தாங்கரை ஊராட்சியில் நூறுநாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு விடுத்ததையடுத்து நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், காட்டேரி பஞ்சாயத் தில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள் ளன. கொரோனா பெருந்தொற்றால் இப்ப குதி மக்களின் வாழ்வாதாரம் முடங்கி போன நிலையில், நுறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், அதுவும் கடந்த 2 மாத காலமாக முற்றிலும் நிறுத்தி விட்டனர். இதுதொடர்பாக, மார்க் சிஸ்ட் கட்சியின் காட்டேரி ஒன்றிய கவுன்சி லர் வி.கோவிந்தசாமி மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஊராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதில், உடனடியாக காட்டேரி ஊராட்சி நிர்வாகம் நுாறு நாள் வேலை திட்டத்தில் மக்களுக்கு வேலை தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது வரை வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் செப். 7 ஆம் தேதியன்று காட்டேரி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நுாறுநாள் வேலை கிடைக்கும் வரை காத்திருக்கும் போராட் டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, இப்போராட்ட எதிரொலி யாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலை வர்களை அழைத்து பேசினர். அதில், காட்டேரி ஊராட்சி மக்களுக்கு நுாறு நாள் வேலை திட்டத்தில் ரூ. 1 கோடியே 12 லட் சத்து 2 ஆயிரத்து 315 ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது எனவும், காட்டேரி ஊராட்சிக் குட்பட்ட 15 ஏரிகள் சீரமைப்பு கால்வாய் பராமரிப்பு, கிராம சாலைகளின் ஓரம் மரக் கன்று நடுதல் போன்ற பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தனர். இக்கூட்டத்தில், விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.