பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி, ஜூன் 13- கொண்டம்பட்டி தலித்கிராம மக்களுக்கு தனியாக பகுதிநேர நியாயவிலை கடை அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி வட்டத்திற்குட்பட்டது கொண்டம்பட்டி ஊராட்சி,கொண்டம்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் அன்றாடம் கூலிவேலைசெய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இங்கு சுமார் 150க் கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இங்கு நியாயவிலை கடை இல்லை. இதனால் இங்குள்ள வர்களில் 100 குடும்ப அட்டைதாரர்கள் புளியம் பட்டி நியாயவிலைக்கடைக்கும், 50 குடும்ப அட்டை தாரர்கள் துரிஞ்சிப்பட்டி கிராமத்திற்கு சென்று பொருள் வாங்க வேண்டும். இவ்விருகிராமங்களுக்கு செல்ல ஒருகிலோ மீட்டருக்கு மேல் நடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு கொண் டம்பட்டிக்கு அருகாமையில் உள்ள நத்தம் கிரா மத்தைச் சேர்ந்த இளவரசன் -திவ்யா காதல் திரு மணத்தால் சாதி ஆதிக்க சக்தியினர் கொண்டம்பட்டி கிராமத்தில் உள்ள தலித் மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கி தீவைத்துகொளுத்தினர். இச்சம்பவத்திற்கு பிறகு புளியம்பட்டி, துரிஞ்சிப்பட்டி ஆகிய கிராமங்க ளில் உள்ள நியாயவிலை கடைக்கு வரும் கொண் டம்பட்டி தலித்மக்களை ஆதிக்கச்சாதியினர் வம்புக்கு இழுப்பது, மிரட்டுவது போன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கொண்டம்பட்டி மக்கள் காவல்துறையில் புகார் செய்தனர். மேலும், நியாய விலை கடைக்கு பொருட்கள் வாங்க வரவேண்டும் என்றால் ஒருநாள் கூலி வேலை செல்வதை விட்டுவிட்டு வேண்டும். சாதி ஆதிக்கசக்தியினர் வம்புக்கு இழுப்பதால் கொண்டம் பட்டியில் பகுதிநேர நியாயவிலை கடை அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பல முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனையடுத்து கூட்டுறவு துறை மூலம் கொண்டம் பட்டி மக்களுக்கு மாதத்திற்கு ஒருநாள் ரேசன் பொருட்களை டெம்போவில் கொண்டம்பட்டிக்கு கொண்டுவந்து பொருட்களை வழங்கிவருவதாகவும் டெம்போ வாடகையாக ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.10 வசூல் செய்யப்படுவதாக அக்கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே கொண்டம்பட்டிக்கு தனிநியாயவிலை கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி அரசுக் கல்லூரியில் ஜூன் 18ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
தருமபுரி, ஜூன் 13- தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு வருகிற ஜூன் 18 ஆம் தேதியன்று நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் (பொ) ஜா.பாக்கியமணி தெரி வித்துள்ளர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அண்மையில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், வருகிற ஜூன் 18 ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கி நடை பெற உள்ளது. இதில், அன்றைய தினம் கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு பிளஸ் 2 வகுப்பில் பகுதி 3-இல் 250 முதல் 201 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதே போல், ஜூன் 19 ஆம் தேதி கலை மற்றும் வணிகவி யல் பாடப்பிரிவுகளுக்கு பிளஸ் 2 வகுப்பில் பகுதி 3-இல் 200 முதல் 176 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கும், ஜூன் 20 ஆம் தேதி கலை, வணிக வியல், தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடப்பிரிவு களுக்கு விண்ணப்பித்த இஸ்லாமிய மாணவர்கள், அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று தெரி வித்துள்ளார்.