மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றுக சித்தேரி மலைவாழ் மக்கள் வலியுறுத்தல்
தருமபுரி, நவ.9- அரூர் அருகே உள்ள சித்தேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அரூர் அருகே உள்ள சித்தேரி ஊராட்சியில் 63 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் முற்றிலும் மலைவாழ் மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள், சித்தேரியில் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் பகலில் மட்டுமே மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில் இரவு நேரங் களில் மருத்துவர்கள் இல்லாததால், உடல் நிலை பாதிக்கப்படுபவார்கள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் பணிபுரியும் மருத்துவர்கள் இருவரும் ஆண்களாக உள்ளனர். இதனால் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் உரிய சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மலைக்கிராமப் பகுதி என்பதால் சித்தேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரு பெண் மருத்துவரை நியமிப்பதுடன், அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் இருப்பில் வைக்கவேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையம் முழுநேரமும் செயல்படுத்த மாவட்டநிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொத்தடிமையாக இருந்த தொழிலாளா்கள் மீட்பு
நாமக்கல், நவ.9- நாமக்கல்லில், போர்வெல் நிறுவ னத்தில் கொத்தடிமைகளாக இருந்த 5 வட மாநிலத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா். நாமக்கல்- சேலம் சாலையில், பென்னா கரம் என்ற இடத்தில் தனியார் போர் வெல் நிறுவனம் உள்ளது. இங்கு வட மாநிலத் தொழிலாளா்கள் 5 போ் கொத்தடி மைகளாக இருப்பதாக நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் எம். கோட்டை குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து, கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் பிச்சமுத்து ஆகி யோர் சம்பந்தப்பட்ட போர்வெல் நிறுவ னத்துக்குச் சென்றனா். அங்கு நடத்திய விசாரணையில், சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த சாந்திலால் (19), பாலிராம் (19), சங்கா் (20), ஜெய்லால் (19), ராஜ்மான் (19) ஆகியோருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டு, கடந்த 16 மாதங்களாக எவ்வித மாத ஊதியமுமின்றி அவா்களை பணியில் அமா்த்தியிருப்பது தெரியவந்தது. அதன்பின் ஐந்து பேரையும் அங்கிருந்து மீட்டு நாமக்கல் கோட்டாட்சியா் அலுவல கத்துக்கு அதிகாரிகள் அழைத்து வந்தனா். அதைத் தொடா்ந்து அவா்களுக்கு விடு தலைச் சான்றிதழ் வழங்கப்பட்டு விரும்பிய இடத்தில் பணியாற்றலாம் என்றும், இனி மேல் கொத்தடிமையாகப் பணியாற்றக் கூடாது எனவும் அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனா்.
சேலத்தில் வயதான தம்பதி தற்கொலை
சேலம், நவ.9- எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி செட்டி காடு பகுதியில் வயதான தம்பதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த கவுண்டம்பட்டி செட்டிகாடு பகுதியைச் சேர்ந்த நல்லாக் கவுண்டர் (76). இவரது மனைவி அருக்காணி (70). இவர்கள் விவ சாயம் செய்து வந்தனர். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனைக்கு செல்வதாக தனது பேரன் கவின் பிரகாஷிடம் கூறிவிட்டு 7ஆம் தேதியன்று மதியம் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் 8ஆம் தேதி வரை வீடு திரும்பவில்லை. இத னால் இருவரையும் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் 8ஆம் தேதி யன்று மதியம் கஞ்சமலை சித்தர் கோயில் மலைப்பகுதியில் உள்ள பாலசுப்பிர மணியர் கோயில் சாலையோரத்தில் தம்பதி யினர் உடல் சடலமாக கிடந்ததை அவ் வழியே வந்த பக்தர்கள் கண்டு இரும் பாலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காவல்துறை யினர் சம்பவ இடம் சென்று விசாரணை செய்தனர். இதில் இருவரும் பூச்சி மருந்தை குடித்து இறந்துள்ளனர் என தெரியவந்தது. மேலும் 8ஆம் தேதி இரவு பெய்த மழையில் இருவரின் உடல்களும் நஞ்சிய நிலையில் இருந்து வந்ததுள்ளது. இருவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக் கப்பட்டது.