தருமபுரி, நவ.7- தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சித்திரைபட்டி கிராமத்தி லுள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத் தில் 30க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.தினந்தோறும் 2 ஆயிரம் டன் அரிசியை லாரிகளில் ஏற்றி வந்த நிலை யில், கொரோனா காலத் தில் கூடுதலாக நான்காயி ரம் டன் அரிசி வரை லாரி களில் ஏற்றி வைத்தனர். இச்சூழலில் இவர்க ளுக்கு தீபாவளி போன ஸாக தமிழக அரசு வெறும் 10 சதவிகிதம் மட்டுமே அறி வித்துள்ளது. குறைந்தபட் சம் கடந்த ஆண்டை வழங் கிய 20 சதவிகித போன சாவது வழங்கக்கோரி தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழக நுழைவு வாயிலில் முற் றுகை போராட்டத்தில் ஈடு பட்டனர்.