tamilnadu

img

தீர்த்தமலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாம்

தருமபுரி, ஜூன் 25- தீர்த்தமலையில் கொரோனா நோய்த் தொற்று குறித்து கனரா வங்கி சார்பில் வியாழனன்று விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. பொதுசுகாதாரத்துறை மற்றும் தீர்த்தமலை கனரா வங்கி சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் வங்கிக் கிளை மேலா ளர் சி. சின்னசாமி தலைமை வகித்தார். இம்முகாமில், கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க பொது மக்கள் அனைவரும் கிருமி நாசினி அல்லது சோப்புகளை பயன்படுத்தி அடிக்கடி கைகளை தூய்மையாகக் கழுவ வேண் டும். வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது முகக் கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். பொது இடங்க ளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்பன உள் ளிட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் கனரா வங்கி உதவி மேலாளர் ராம ஆஞ்சநேயர், கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன், தருமபுரி மாவட்ட நலக் கல்வியாளர் பி.ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.