tamilnadu

அம்மா இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

 தருமபுரி, ஜூன் 22- அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பணியிடங்களுக்கும், பிற வேலை களுக்கும் எளிதில் செல்லும் வகையில் மகளிர் இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவிகித மானி யம் வழங்கும் அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் தமிழ் நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.  இந்நிலையில், 2018-19 ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 18 முதல் 40 வயதிற்குட்பட்ட இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் உள்ள ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை உள்ள மகளிர், அரசு சாரா நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்ட மைப்புகள், அரசு திட்டங்களில் பணிபுரிபவர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட மக்கள் கற்றல் மையம், ஆக பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்படி திட்டத்திற்கான விண்ணப்பங்களை அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், தருமபுரி நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து பேரூராட்சி களிலும் வரும் ஜூலை 4 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து பயன் பெறலாம். மேலும், இதில் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால் 1077, 8903891077 -ல் உடன் தெரிவிக்க கோரப் படுகிறது. விண்ணப்பங்கள் www.Dharmapuri. nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.