tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர ஊழியராக அறிவித்திடுக அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, அக். 28- அங்கன்வாடி ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக அறிவிக்கக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் ஏ.தெய்வானை  தலைமை வகித்தார். இதில், மாநில செயலாளர் லில்லிபுஷ்பம், மாவட்ட பொருளாளர் ஈஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் சி.அங்கம்மாள், மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஆர்ப் பாட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட் டது.