தருமபுரி, மார்ச் 2- சிவாடியில் எச்பிசிஎல் சேமிப்பு கிடங்கு அமைப்பதை கைவிட்டு, இத்திட்டத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியு றுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.என்.மல்லையன், மாவட்டச் செயலாளர் சோ.அருச் சுணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், சிவாடி கிராமத்தில் பெரும் அள வில் தலித் மக்கள் வசித்து வருகின் றனர். இம்மக்கள் அரை ஏக்கர் முதல் ஒரு ஏக்கர் வரை நிலம் வைத் திருக்கும் சிறுகுறு விவசாயிகளா கும். இந்த சூழலில் மத்திய அரசின் விஜயவாடா - தருமபுரி (விடிபி எல்) பைப்லைன் திட்டத்தில் எச்பி சிஎல் நிறுவனம், சிவாடியில் பெட் ரோலியம் சேமிப்பு கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தலித் மக்களின் நிலத்தை கையகப்படுத்த முயற்ச்சித்து வரு கிறது. எனவே, விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்ப டுத்த கூடாது என ஆட்சேபம் தெரி வித்து ஊர்பொதுமக்கள் ,விவசா யிகள் மற்றும் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் சார்பில் 21-05-2018-ல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரும் அரசுக்கு பரிந்துரைப் பதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் இத்திட்டத்தை எதிர்க்க வில்லை. மாறாக, பாலக்கோடு அருகே மாரண்ட அள்ளி, காடு செட்டிப்பட்டி, கும்மனூர் பகுதி யில் ரயில்வே இருப்புப்பாதை ஒட்டி வனப்புறம்போக்கு நிலத் தில் இத்திட்டத்தை செயல்படுத்த லாம். கடந்த ஜன. 26ஆம் தேதி யன்று சிவாடியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இத்திட் டத்தை அமல்படுத்த கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான நகலை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுக் கப்பட்டது. மேலும், பிப். 18ஆம் தேதியன்று இத்திட்டத்தை கைவிடக் கோரி மனுகொடுக்கும் போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். இதைத்தொடர்ந்து பாலக் கோடு அருகே கும்மானூரில் இத் திட்டம் அமைய நிலத்தினை பார்வையிட்டு சர்வே செய்ததாக அறிகிறோம். இத்திட்டம் குறித்து பிப்.26ஆம் தேதியன்று சென்னை தலைமை செயலக முதன்மை செய லாளர், தொழில்துறை செயலாளர் மற்றும் முதலமைச்சரின் தனிச்செ யலாளர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தோம். முதன்மை செய லாளரும் இத்திட்டத்தினால் விவ சாயிகளுக்கு பாதிப்பு இருக்கும் பட்சத்தில் வேறு இடத்தில் அமைக்கப்படும் என தெரிவித் தார். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் சூழல் 60 சதவிகித விவசாயிகள் இத்திட் டத்துக்கு நிலம் கொடுத்து விட் டார்கள் எனவும், சிறு எண்ணிக் கையிலான விவசாயிகளிடம் நிலத்தைப் பெற வேண்டியுள்ளது. மேலும், இப்போது நிலம்கொடுத் தால் ரூ.25 லட்சம் இழப்பீடு, பிறகு கொடுத்தால் ரூ.3.50 லட்சம் என விவசாயிகளை அதிகாரிகள் மிரட்டி வருகின்றனர். இது கண் டிக்க தக்கது.விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விவசாயிகள் இத் திட்டத்துக்கு நிலம் வழங்கியதாக அதிகாரிகள் பத்திரிக்கையில் அறிக்கை விடுவது உண்மைக்கு புறம்பானது. எனவே, இத்திட்டத்தை சிவா டியில் அமைப்பதை கைவிட்டு பாலக்கோடு அருகே வனப்புறம் போக்கு நிலத்தில் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் மாவட்ட நிர்வாகத் தையும் தமிழக அரசையும் வலியு றுத்தியுள்ளது இவ்வாறு, இந்த றிக்கையில் கூறியுள்ளனர்.