தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கெசர்குழி காப்புக்காடு வனப்பகுதியில் கர்ப்பிணி யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக 6 யானைகள் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்துள்ளன. இந்த நிலையில், பாலக்கோடு அருகே உள்ள கெசர்குழி காப்புக்காடு வனப்பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்று நேற்று உயிரிழந்த நிலையில் கிடந்தது.
தகவலறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து, மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து யானைக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அந்த யானை விஷக்காய்கள் தின்றதால் வயிற்றில் இருந்த குட்டியானையுடன் இறந்து கிடந்தது என்பது தெரியவந்தது.