tamilnadu

img

மயிலாடுதுறை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி

தரங்கம்பாடி:
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் டெங்கு காய்ச்சலால் ஆசிரியை ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரின் மனைவி சத்யாதேவி (35). தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியையான இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ச்சை பலனின்றி திங்களன்று உயிரிழந்தார்.இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலை கீழநாஞ்சில்நாடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை முறையாக அளிக்காமல் அலட்சியப்படுத்தியதும், மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதாலேயே பெண் உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  ந.நி.

;