விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட அகழாய்வில், கூம்பு வடிவ சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்கத் தாலி, நாயக்கர் கால செப்பு காசுகள், வணிக முத்திரைகள், யானை தந்தத்திலான பகடைக்காய், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,600-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.