முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல மைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். சென்னை அண்ணா சாலையிலிருந்து ஊர்வலமாகச் சென்றனர்.இதையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.