புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க இருப்பதாக நடிகர் சோனு சூட் அறி வித்துள்ளார்.
பக்ரீத் பெருநாளையொட்டி தில்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தி யுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணா நிதி ஆகியோருக்கு கார் ஓட்டி ஓய்வு பெற்ற ஓட்டுநர் வாழப்பாடி அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
விவசாயிகளுக்கு நான்கு மாதத்தில் முருங்கை திசு கன்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கோவை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் மணி கண்ட பூபதி தெரிவித்தார்.பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டி.என்.பி.எல். போட்டியை ரத்து செய்வது குறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.டாக்டர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப் பட்ட அமெரிக்க விண்கலம் நன்றாக செயல்படுகிறது என்று நாசா தெரிவித்துள்ளது.