tamilnadu

img

மடத்துக்குளம் தாலூகாக்குழுவின் சார்பில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலூகாக்குழுவின் சார்பில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு மற்றும் பொதுக்கூட்டம் சிபிஎம் கிளை செயலாளர் தெண்டபாணி தலைமையில் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் இராமலிங்கத்திடம் 9 ஜந்தாண்டு சந்தா உள்ளிட்ட 80 தீக்கதிர் சந்தாவிற்கான தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், தாலுகா செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.