tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உலகிலேயே முதலாவதாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ரஷ்யா அனுமதி வழங்கி யுள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார்.

இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் தொடங்கியதால் காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியுள்ளது.

சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு ஆகஸ்ட்  31 ஆம் தேதி வரை மேற்கு வங்காள அரசு தடை விதித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில்  18 போலீசார் காயமடைந்தனர்.

பவானிசாகர் அணையின் நீர்ம ட்டம்  100 அடியை எட்டியுள்ளது.

சென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி தெற்கு ரெயில்வே சோதனை மேற்கொள்கிறது.

மீதமுள்ள அம்மோனியம் நைட்ரேட் 15 கண்டெய்னர்களில் ஓரிரு நாளில் சென்னையிலிருந்து பாதுகாப்பாக அகற்றப்படும் என்று வெடிபொருள் துறையின் துணை முதன்மை கட்டுப்பாட்டாளர் சுந்தரேசன் கூறினார்.

தமிழகத்தில் மின்னணு விற்ப னை எந்திரங்கள் வாயிலாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விற்பனை தொகையை மின்மயமாக வாடிக்கையாளர்களி டம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மின்சார குக்கர்கள்  மூலமாக என்95 முகக் கவசத்தை நன்கு தூய்மைப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை இது வரை 87 சதவீதம் கூடுதலாக பெய்து ள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.