சென்னை,மார்ச் 9- மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக உள்ள 55 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள திருச்சி சிவா (திமுக), டி.கே.ரங்க ராஜன் (சிபிஎம்), சசிகலா புஷ்பா (அதி முக), விஜிலா சத்யானந்த் (அதிமுக) மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இந்த காலி இடங்களுக்கு புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக வருகிற 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக் களை பெறுவதற்கு தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தேர்தல் அதிகாரி யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டிருந்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வ ராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் திங்களன்று (மார்ச் 9) சட்டப்பேரவை செய லாளர் சீனிவாசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னி லையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ். பாரதி, தயாநிதி மாறன், கனி மொழி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, சக்கர பாணி, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணி யன், சேகர்பாபு, ப.ரங்கநாதன், இ.கருணாநிதி, மாதவரம் சுதர்சனம் உள்பட ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.