tamilnadu

img

திமுக வெற்றி அதிமுகவிற்கு மரண அடியாக அமையும்

விக்கிரவாண்டியில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

விழுப்புரம், அக். 12- விக்கிரவாண்டி தொகுதியில் திமுக பெறவுள்ள வெற்றி அதிமுக விற்கு மரண அடியாக அமையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறினார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து சிபிஎம் சார்பில் விக்கிர வாண்டியில் நடைபெற்ற  பிரச்சார பொதுக்  கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் இன்னும் எத்தனை நாளைக்கு அதிமுக ஆட்சி நீடிக்கி றதோ  அதுவரைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு துக்கமும்,துயரமும் தான் நீடித்துக் கொண்டிருக்கும். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என முடிவு கட்டும் தேர்த லாக இந்த இடைத்தேர்தல் அமைய வேண்டும். எப்படியாவது ஆட்சியைக்  காப்பாற்ற வேண்டும் என்பதற்காக யார் யாரை எப்படி மடக்க வேண்டும்  அப்படி எல்லாம் மடக்கும்  வேலை யைத் தான்  முதலமைச்சரும், துணை  முதலமைச்சரும் செய்து கொண்டி ருக்கிறார்கள்.

 ஜெயலலிதா  மறைந்த பிறகு தலை மைச்  செயலகத்தில் ரெய்டு, தலைமை  செயலாளர் வீட்டில் ரெய்டு  அமைச்சர்  விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. கடந்த ஓராண்டாக யார் வீட்டிலும் ரெய்டு கிடையாது. இப்போது நிறுத்தி  வைத்திருக்கிறார்களே அதுதான் ஓபிஎஸ் ஈபிஎஸ் சாதனை.மோடி காலில் விழுந்து கிடப்பதால் ரெய்டில்  இருந்து தப்பித்து கொண்டிருக்கி றார்கள். கரும்பு விவசாயிகளுக்கு 2 ஆயிரம் கோடி கருப்புப் பணம் பாக்கி  இன்னும் கிடைத்தபாடில்லை.  நீட்  தேர்வில் ஆள்மாறாட்டம் சந்தி  சிரிக்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என்று கேட்டால் மோடி அதற்கு வழி  காட்டவில்லை. நீட் தேர்வைப் பற்றி  எடப்பாடி வாய்திறக்க மறுக்கிறார். தேர்வு இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன? எத்தனை பேர் செத்து  சுடுகாட்டுக்கு சுண்ணாம்பா போனா லும் ஆட்சி மட்டும் இருந்தால் போதும்,  ஆட்சியைக் காப்பாற்ற மோடி இருந்தால் போதும், என 24 மணிநேர மும் மோடிக்கு பஜனை பாடும் கூட்ட மாக  அதிமுக மாறியிருக்கிறது. 

தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெய லலிதா ஆட்சி நடக்கவில்லை.   ஆர்எஸ்எஸ் பாஜக பினாமி ஆட்சி தான்  நடக்கிறது. மோடியைப் பார்க்க பாமக  நிறுவனர் ராமதாஸ் தில்லி போகிறார்,  கேட்டால் தமிழர் ஏழு பேர் விடுதலை என்கிறார். தீவிரவாதிகள் எல்லாம் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆனால் உச்சநீதிமன்ற எல்லாவித மான வழக்குகளையும் தள்ளுபடி செய்தும் தமிழர்கள் 7பேரை விடு தலை செய்ய நரேந்திர மோடி  அனு மதிக்கவில்லை. 100 நாள் வேலை என்பது மக்க ளுக்கு இருக்கிற ஒரே திட்டம், அதனை ஒழித்துக் கட்டி விட்டார்கள். நாடு முழுவதும் 40 கோடி மக்கள் பயன்படுத்தும் இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு வெறும் 60 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு  ஒதுக்கி யுள்ளது. தமிழ்நாட்டில் தொழிற் சாலைகளை மூடப்பட்டு வருகின்றன. இந்த லட்சணத்தில் தமிழக முதல்வர் லண்டன்,  அமெரிக்காவுக்குச் சென்று  அங்குள்ள முதலாளிகளைத் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார். மூடிக்கிடக்கிற தொழிற்சாலைகளைத்  திறக்க என்ன வழி என்பதை யோசிக்கவேண்டும்,  வெளிநாட்டு மூலதனம் என மக்களை ஏமாற்றும் வேலை நடக்கிறது. 

தனியார் மயமாகும் ரயில் நிலையங்கள் 

150 ரயில் நிலையம் தனியார் வசம்  போனால் அரசு வேலையில் இட  ஒதுக்கீடு இருக்குமா என்று பாஜகவை  ஆதரிக்கும் பாமகவினரை பார்த்து கேட்கிறேன். வருங்காலத்தில் விழுப்பு ரம் ரயில்வே நிலையம் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமாகும். சென்னை சென்ட்ரல்  ரயில் நிலை யம் அம்பானிக்கும்,  எழும்பூர் அதா னிக்கும் தாரைவார்க்கப்படலாம்.  ஒரு நாளைக்கு  ஒட்டுமொத்த ரயில்வே துறையே தனியாருக்குப் போய்ச் சேரும். தமிழ்நாட்டில் உள்ள பீரங்கி,  துப்பாக்கி, ரயில் பெட்டி தொழிற்  சாலைகளைத்  தனியார் வசம் ஒப்ப டைக்கப்போவதாக மத்திய அரசு கூறு கிறது. மோடி ஆட்சி இந்தியாவையே எடைபோட்டு விற்று விட்டாலும் ஆச்ச ரியப்படுவதற்கில்லை.  இப்படிப்பட்ட மோடிக்கு காவடி தூக்கும் ஆட்சி  தான் எடப்பாடி கட்சி, தமிழ்நாட்டை இரண்டா பிரிச்சா இரண்டு முதல மைச்சர் வரும் என்று நினைப்பவர்கள் தான் தமிழக ஆட்சியாளர்கள்.   

திமுக கூட்டணி வரும் 24ஆம் தேதி  விக்கிரவாண்டியில் மட்டுமல்ல ராதா புரத்திலும் வெற்றி பெறும். விக்கிர வாண்டி வாக்காளர்கள் கொடுக்கிற அந்த அடி, அதிமுக  ஆட்சிக்குக் கொடுக்கும் மரண அடியாக அமைய  வேண்டும். இந்த தொகுதியைப் பொறுத்தவரையில்  ராமமூர்த்தி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நீங்கள் வைத்த பல்வேறு கோரிக்கை களைப் பெற்றுத்தந்தார்.   நா.புக ழேந்திக்கு  உதயசூரியன் சின்னத்தில்  வாக்களிக்க வேண்டும்.  இத்தொகுதி யில் உள்ள  அத்தனை கிராமங்க ளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தொண்டர்கள், ஆதரவாளர்கள் சென்று வாக்கு சேகரிக்கும் பணியை வெற்றிகரமாக நடத்தி வாக்கு எண்ணு கிறபோது அதிகப்படியான வாக்கு கள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது என்ற  என்ற நிலைமையை உருவாக்கித் தருவார்கள். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடிஎம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் உட்பட  கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வி. கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.  மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.தண்டபாணி, வட்டச் செயலாளர் ஆர். கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். முன்னதாக  ஏ.கிருஷ்ண மூர்த்தி வரவேற்றார்.