tamilnadu

img

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திமுக போராட்டம்

தஞ்சாவூர்,ஜன.28-  காவிரி டெல்டா பகுதிகளை பாலைவன மாக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் செவ்வாயன்று போராட்டம் நடைபெற்றது. காவிரி டெல்டா பகுதியில் அமைக்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டமோ நடத்த தேவையில்லை என்று மத்திய பாஜக அரசு சமீபத்தில் அறிவித்தது.  இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் காவிரி டெல்டா பகுதி மக்களும்  கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜனவரி 28 செவ்வா யன்று டெல்டா மாவட்டங்களில் திமுக  சார்பில் கண்டன போராட்டம் நடை பெற்றது. தஞ்சாவூர், கடலூர், நாகை, திரு வாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங் களில் போராட்டங்கள் நடைபெற்றன.

;