tamilnadu

img

அனைத்து மாவட்டங்களிலும் ஜவுளிப்பூங்கா விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை

சேலம், மார்ச் 12-  விசைத்தறி தொழிலாளர்களை அச்சுறுத்தும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்க மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர்கள் சம்மேளன மாநிலக்குழுக் கூட்டம் சேலத்தில் தலைவர் பி.முனுசாமி தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில்  சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் கே.சி. கோபி குமார்,  மாநிலப் பொருளாளர் எம் .அசோகன், மாநில நிர்வாகி எஸ்.சுப்பிரமணியம், சேலம் மாவட்ட சிஐடியு  செயலாளர் டி. உதய குமார், சேலம் மாவட்ட விசைத்தறி தொழிலா ளர் சங்க செயலாளர் பி.சந்திரன் உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

விசைத்தறியை  கண்டுகொள்ள மறுப்பு

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பாரம்ப ரியமான விசைத்தறி தொழிலில் சுமார் ஏழு லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.   பாஜக அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி காரணமாக விசைத்தறி கடும் நெருக்க டிக்குள்ளாகியுள்ளது. இதற்குத் தீர்வு காண கடந்த பட்ஜெட்டில் தொடங்கி இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.  பொருளாதார நெருக்கடியால் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. இதனால் வறுமையும் வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. விசைத்தறி தொழி லைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் ஜவுளிப்பூங்கா

 விசைத்தறி தொழிலைப் பாதுகாக்க அனைத்து மாவட்டங்களிலும் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும்.  இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டுகள் வழங்க வேண்டும். எட்டு மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச ஊதியமாக 21,000 வழங்க வேண்டும். தொ ழிலாளர் சட்டங்களை  முழுமையாக அமல் படுத்த வேண்டும்.  வீடில்லாத விசைத்தறி தொழிலாளர்களுக்கு  இலவச வீடுகள் கட்டித் தரவேண்டும். 

செயலற்றுப்போன  தொழிலாளர் நலவாரியம்

 தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரிய பணிகள் முடங்கிவிட்டன. இதனால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு பலன்கள் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. தமிழகஅரசு தொழிலாளர் நலவாரியத்தை சீரமைக்க வேண்டும். 

குண்டர்களால் அச்சுறுத்தப்படும் தறியாளர்கள்

சேலம் மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் விசைத்தறி கூடங்கள் அமைக்கக் கடன் வாங்கிய விசைத்தறி தொழி லாளர்கள், தறியாளர்கள் ஜவுளித் தொழில் நெருக்கடி,  மந்த நிலையால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதை தங்களுக்கு வங்கிகள் சாதகமாக்கிக் கொண்டு  கடுமையாக வட்டி சுமத்துவதோடு குண்டர்களை வைத்து குடும்பங்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றன. இத னால் தொழிலாளர்கள் மன உளைச்ச லுக்குள்ளாகி  தற்கொலைக்கு முயற்சிக்கின்ற னர். தமிழக அரசு இந்தப் பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விசைத்தறி தொழிலாளர்,  விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களுக்கு இடையே ஏற்படும் ஊதியம்,  போனஸ் ஒப்பந்தங்களை 12-3 ஒப்பந்தமாக ஏற்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் விசைத்தறியை தொழில் மானிய கோரிக்கையில் சேர்த்து விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கையை நிறை வேற்ற வேண்டும். இது தொடர்பாக தமிழகம் முழுவதுமுள்ள  விசைத்தறி தொழிலாளர் சங்கங்கள் (சிஐடியு) தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரரா ஜன்  தலைமையில் தமிழக ஜவுளித் துறை அமைச்சரைச் சந்தித்து விசைத்தறி நெச வாளர்கள் பிரச்சனை தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. கோரிக்கைகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.  இது லட்சக்கணக்கான குடும்பங்களில் வேதனைகளை நிராகரிப்ப தாக உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொழி லாளர் நல சட்ட திருத்தங்கள் தொடர்பான மசோதா விவாதத்திற்கு வரும் நாளன்று சிஐடியு மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். அதில் விசைத்தறி தொழிலாளர்கள் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.  மக்களைப் பிளவுபடுத்தும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், பல்வேறு முற்போக்கு அமைப்புகள் சார்பாக மார்ச் 23-ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது. அந்தப் போராட்டத்தில் அனைத்து விசைத்தறி தொழிலாளர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.