தங்க கடத்தல் வழக்கு
கொச்சி, ஆக.28- தங்க கடத்தல் வழக்கில் ஆர்எஸ்எஸ் தொலைக்காட்சியான ஜனம் டிவி ஆசிரியர் அனில் நம்பியார் என்ஐஏ விசாரணையில் அளித்துள்ள வாக்குமூலம் பாஜகவின் உயர்மட்ட தலைவர்களையும் சந்தேக நிழலில் நிறுத்தியுள்ளது. யுஏஇ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தி யதில் முக்கிய குற்றவாளியான சொப்னா சுரேஷ் உள்ளிட்டோருடன் பாஜக தலைவர்க ளுக்கு இருந்த நெருங்கிய தொடர்பு குறித்த விவரங்கள் விசாரணைக் குழுவுக்கு கிடைத் துள்ளதாக கூறப்படுகிறது. யுஏஇ தூதரகத் தின் உயர்மட்டத்தினருக்கு பாஜகவினருடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்தியது அனில் கூறியதன் பேரில் என சொப்னா தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சொப்னாவின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அனில் நம்பியாரிடம் வியாழனன்று என்ஐஏ அதிகாரி கள் விசாரணை நடத்தினர். தூதரகம்- பாஜக உறவில் அவரது பங்கு குறித்த சொப்னாவின் வாக்குமூலத்தை அப்போது அனில் நம்பியார் ஒத்துக்கொண்டார்.
தங்க கடத்தல் அம்பலமான ஜூலை 5ஆம் தேதி சொப்னா சுரேஷும் அனில் நம்பியாரும் இரண்டு முறை அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, தூதரக பார்சல் விடுவிக்கப்படவில்லை என்றால் சரித் குற்றத்தை ஏற்கச் செய்ய வேண்டும் எனவும், மற்றதை நாங்கள் பாரத்துக் கொள்கிறோம் என சொப்னாவிடம் அனில் நம்பியார் தெரி வித்திருந்தார். இதுதான் தங்க கடத்தல் வழக்கில் பாஜக தலைவர்களை சந்தேக நிழலில் நிறுத்த வழிவகுத்தது. கேரள பாஜக தலைவர்களில் சிலருக்கு இவற்றில் உள்ள நெருக்கமான தொடர்புகள் குறித்தும் விசா ரணைக் குழுவிடம் அனில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனில் நம்பியாருக்கு பினாமி பங்குள்ள தாக கூறப்படும் திருவனந்தபுரம் டைல்ஸ் ஷோரூமை 2019-இல் யுஏஇ தூதரக ஜெனரல் தான் திறந்து வைத்தார். இந்த ஷோரூமின் மற்றொரு பங்காளியின் பெயரில் உள்ள சாஸ்தமங்கலம் உல்லாச மாளிகையில் சொப்னாவும் சில பாஜக உயர்மட்ட தலை வர்களும் சந்தித்துக் கொண்டதற்கான ஆதா ரங்களையும் விசாரணைக்குழு திரட்டி யுள்ளது. மத்திய அமைச்சர் வி.முரளீதரன், கும்மனம் ராஜசேகரன், கே.சுரேந்திரன் ஆகி யோருடன் தனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக அனில் நம்பியார் தெரிவித்துள் ளார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிடி பட்ட தங்கம் இருந்தது தூதரக பார்சலில் அல்ல என சுங்கத்துறையிடம் எழுதித்தர சொப் னாவிடம் கூறியது அனில் நம்பியார் தான். தனி நபர் சம்பந்தமான பார்சல் எனக்கூறி விடு விக்குமாறு கோரியவர், அது சாத்தியமில்லை என்றால் திருப்பி அனுப்புமாறும் கோரினார். இதற்காக தூதரக ஜெனரலின் முகவரியில் இருந்து சொப்னா சுரேஷ் மெயில் அனுப்பி யிருந்தார். அதன்பிறகே, ‘பிடிபட்டது தூதரக பார்சல் அல்ல’ என மத்திய அமைச்சர் வி. முரளீதரன் தில்லியில் செய்தியாளர்களிடம் அடித்துக் கூறினார். ஆனால் அமலாக்கத் துறையும். என்ஐஏவும் தங்களது ஆவணங்க ளில் தூதரக பார்சல் என தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றன.