tamilnadu

img

மதவெறியர் ஆட்சியின் தனியார்மய வேட்கைக்கு முடிவு கட்டிய உ.பி. தொழிலாளர் வர்க்கம்...தமிழக அரசுக்கும் இது ஓர் எச்சரிக்கை

இந்தியாவில் மாநிலங்களின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான மாநில மின்சார வாரியத்தை கம்பெனிகளாக பிரித்து தனியாரிடம் தாரைவார்க்க மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மாநில அரசுகளை மத்திய அரசு அச்சுறுத்தல் செய்து மின்சார சட்டத்திருத்த மசோதா 2020ஐ ஆதரிக்க வைக்க முயற்சித்து வருகிறது.நாடு முழுவதும் இந்த மின்சார சட்டத்திருத்த மசோதா 2020ஐ எதிர்த்து மின் ஊழியர்கள், நுகர் வோர்கள், விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த மசோதா பல்வேறு காரணங்களால், நடந்துமுடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வரவில்லை. ஆனால் மோடி அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் மாநில அரசுகள் கொல்லைப்புற வழியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து
வருகின்றார்கள்.

உ.பி. மின்வாரியம்
இதனொரு பகுதியாகத்தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பூர்வாஞ்சல் மின்விநியோக கம்பெனியை தனியாரிடம் ஒப்படைக்க உ.பி.அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து டுமையானபோராட்டங்களை நடத்தி வந்தார் கள். உ.பி. மாநில மின்வாரிய ஊழியர்கள், றியாளர்கள். இந்தப் போராட்டத்தை ஒடுக்க உ.பி. யோகிஅரசு இராணுவத்தை அழைத்துக்கொள்ளவும் 19 ஐஏஎஸ் அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக அமர்த்தியும் போராடுபவர்களை ஒடுக்க நினைக்க உத்தரவிட்டது.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் மின் ஊழியர்கள், பொறியாளர்கள் ஆர்ப்பாட்டங்களையும், கண்டன முழக்கங்களையும் எழுப்பி ஆதரவளித்தனர். நாடுமுழுவதும் கிடைத்த ஆதரவு உ.பி.மாநில மின்வாரிய ஊழியர்கள் பொறியாளர்களுக்கு தெம்பு அளித் தது. இராணுவமே வந்தாலும் எதிர்கொண்டு போராடுவது என போராட்டம் நடத்தினார்கள்.5.10.2020 அன்று உ.பி. மாநில மின்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டி மாநில மின்வாரியங்களை பிரிக்கமாட்டோம் என ஷரத்துகள் சேர்க்கப்பட்ட நிலையில் உ.பி. மாநில மின்வாரிய ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர் கூறியும் கையெழுத்திட மறுத்தார்கள்.

இருளில் மூழ்கிய மாநிலம்
அதற்கு மறுநாள் 6.7.2020 போராட்டம் தீவிரமடைந்தது. முந் தைய நாள் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. ஊழியர்கள் போராட்டம் காரணமாக சீர்செய்ய இயலவில்லை. அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வீடுகள் இருளில் மூழ்கின.போராட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை உணர்ந்து இதுபெரிய மக்கள் பிரச்சனையாக மாறும் என எண்ணி உ.பி. அரசு 6.7.2020 மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைத்தது.அன்றே அதே இடத்தில், தேசிய மின் ஊழியர் மற்றும் பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்கள் கூறி நாடு முழுவதும் அக்டோபர் 8, 9ஆகிய இரு தினங்களில் மின் ஊழியர்கள் 1 மணி நேரம் வேலையை புறக்கணிப்பது என்றும், அக்டோபர் 12 ஆம் தேதி மாநில அமைப்புகள் கூடி விவாதித்து எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என முடிவு எடுத்தது.இந்த சூழ்நிலையில் போராட்டம்தீவிரமடையும் என உணர்ந்த யோகிஅரசு, தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் விளைவாக எந்த மின் விநியோக கம்பெனியையும் தனியாரிடம் ஒப்படைக்கமாட்டோம் என ஒப்பந்தம் போடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

வர்க்க நலனை கையில் எடுத்த தொழிலாளி
இந்த போராட்டத்தில் ஈடுபட்டதொழிலாளிக்கு மதம், மொழி, ஜாதி,இனம் என எந்த அடையாளமும் குறுக்கே நிற்கவில்லை. பொதுத் துறையை பாதுகாப்போம் வர்க்க நலனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அந்த எண்ணமும் நமது ஆதரவும் அவர்களை வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளது.உ.பி. மாநில மின் ஊழியர்களின் - பொறியாளர்களின் இந்த மகத் தான போராட்டம் தமிழக மின் ஊழியர்களுக்கு உற்சாகத்தையும் நம் பிக்கையையும் ஊட்டியுள்ளது.
தமிழகத்தில் மின்சார சட்டத்திருத்த மசோதா 2020ஐ எதிர்ப்பது போல காட்டி, துணை மின் நிலையங்களை இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிக்க ரூ.93.67 லட்சத்தை வாரி வழங்கி, தனியாரிடம் துணை மின் நிலையங்களை ஒப்படைக்கும் செயலை தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால், மிகப்பெரிய போராட் டம் தமிழகத்திலும் நடக் கும். அதற்கு உ.பி. மாநில மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் உத் வேகத்தை அளித்துள்ளது.

===எஸ்.இராஜேந்திரன்===
பொதுச் செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)