ரூ.500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்த போலிச் சாமியார் கல்கி
விஜயவாடா,அக்.20- ரூ.500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்த சாமியார் கல்கி விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்கு தப்பிஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல் பட்டு வருகிறது. விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என்று அறிவித்துக்கொண்டு ஆசிரமங்களை தொடங்கினார். கல்கி ஆசிரமங்களுக்கு சென்னை, ஆந்திரா, கர்நாடகா என நாடு முழுவதும், வெளி நாடுகளிலும் கிளைகள் உள்ளன. இங்கு காணிக்கை, சிறப்பு பூஜை என்ற பெயரில் கட்ட ணம் வசூலிக்கப்பட்டது. கல்கி விஜய குமாரின் மகன் பல தொழில் நிறுவனங் களையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கல்கி ஆசிரமங் களில் அதிகளவு வரி ஏய்ப்பு செய்யப் பட்டுள்ளதாக வருமானவரித் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள கல்கி ஆசி ரமங்கள் உள்பட 40 இடங்களில் வரு மான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சனிக்கிழமை யன்றும் கல்கி ஆசிரமத்தில் சோத னை நடத்தினர். இதில் ரூ.43 கோடியே 90 லட்சம் பணம், ரூ.18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர், 88 கிலோ தங்க கட்டிகள், நகைகள், ரூ.5 கோடி மதிப்புள்ள வைர கற்கள், மேலும் கணக்கில் வராத ரூ500 கோடிக்கு மேல் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கி பகவான் குழுமம் சார்பில் இந்தியாவை தவிர வெளிநாடுகளில் உள்ள கம்பெனிகளில் பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சாமியார் கல்கி விஜயகுமார் ஆந்திர மாநிலம் வரதய்ய பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் வசிப்பதாக கூறப்படு கிறது. சோதனையின் போது அவர் அங்கு இல்லை. ஆசிரமத்தில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வரு கிறது. இதில் ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. ரூ.500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதால் சாமியார் கல்கி விஜயகுமாரிடம் விசாரணை நடத்த வரு மான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால் சாமியார் கல்கி விஜயகுமார் எங்கு இருக்கிறார் என்பது குறித்து ஆசிரமத்தில் உள்ளவர் களுக்கு தெரியவில்லை. அவரை பார்த்து 2 ஆண்டுகள் ஆகிறது என்று ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சாமியார் கல்கி விஜய குமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பாஸ் போர்ட்டை வருமான வரித்துறையினர் தீவிரமாக தேடினர். ஆனால் அது கிடைக்கவில்லை. இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். மோடியின் பாஜக ஆட்சியில் தேசிய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சாராய வியாபாரி விஜய் மல்லையா, வைர வியாபாரி நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் வரிசை யில் சாமியார் கல்கியும் சேர்ந்துள்ளார் என்று அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் கூறுகின்றனர்.