தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது.
கோவிட்-19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த சூழலில், தமிழகத்தில் வரும் ஜூன் 1 முதல் 12-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதற்கு peR, கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதை அடுத்து ஊரடங்கு முழுமையாக நீக்கப்படாத நிலையில், போக்குவரத்து வசதியும் இல்லாத சூழலில், தேர்வுகள் நடத்தக்கூடாது என்று தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் இன்று தாக்கல் செய்துள்ளார்.