tamilnadu

img

ஒடிசா மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிவாரணம் - தமிழக அரசு அறிவிப்பு

ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகர்ந்து கோபால்பூர் மற்றும் பூரி தெற்கே உள்ள சந்த்பாலி இடையே நேற்று முன்தினம் காலை புயல் கரையை கடந்தது. ஃபானி புயலால் ஒடிசா மாநிலத்தில், பல இடங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டது.

இந்நிலையில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா மாநிலத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 கோடி வழங்கப்பட இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 


;