திருவனந்தபுரம், மே 20- கோவிட்- ஊரடங்கு காலத்தில் பொது விநியோக ஏற்பாடு மூலம் கேரள அரசின் தலையீடு மக்களுக்கு ஆறுதல் அளித் துள்ளதாகவும், நாட்டிலேயே முதல் முறையாக இதற்காக பொது விநியோக அமைப்பை பயன்படுத்திய கேரளம் எனவும் ‘சமூக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கான மையம்’ (சிஎஸ்இஎஸ்) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உரிமையானது ரேசன்
குடும்ப அட்டை உள்ள குடும்பங்களில் 92 சதவிகிதத்தினர் ரேசன் பொருட்கள் வாங்கியுள்ளனர். 16 சதவிகிதத்தினர் முதல் முறை யாகவோ, அல்லது நீண்ட இடை வெளிக்குப் பிறகோ ரேசன் வாங்கினர். முன்னுரிமைப் பிரிவினரில் 98 சதவிகி தம் ்பேரும், மாநில மானியப் பிரிவினரில் 91 சதவிகிதமும் முன்னு ரிமை அல்லாத பிரிவினரில் 85 சதவிகிதம் குடும்பங்க ளும் ரேசன் வாங்கியுள்ளன. அன்றாடத் தேவை களுக்காக உள்ளூர் மளிகைக் கடைகளை பயன்படுத்துவது 15 சத விகிதம் அதிகரித்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகளை நம்பி இருந்தவர்கள் 38 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகித மாக குறைந்துள்ளது.
வருவாய் வீழ்ச்சி
மாநிலத்தில் 504 பேரிடம் சேகரிக்கப் பட்ட விவரங்களில் 61 சத விகிதம் பேர் தங்களது வருவாய் குறைந்துள்ளதாக கருத்து தெரி வித்துள்ளனர். முன்னுரிமை பகுதியினரில் 97 சதவிகிதம் பேரும், முன் னுரிமை அல்லாதோரில் சரிபாதியினரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர். அன்றாட செலவுகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என 92 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
முககவசம் அணிதல்
87 சதவிகிதம் குடும்பங்களும் வெளியே செல்லும்போது முக கவசம் அல்லது அதுபோன்ற துண்டை பயன் படுத்தி முகம் மறைப்பதாக தெரிவித்த னர். 70 சதவிகிதம் பேர் சானிட்டைசர் அல்லது சோப்பு பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.